மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் பஸ்களில் மாணவ-மாணவிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. மேலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜேந்திரன் திருக்கடையூர்.