சென்னை திரு.வி.க நகர், அருந்ததி நகர் மேட்டுப்பாளையம் பகுதியில் 16 தெருக்கள் உள்ளன. இந்த 16 தெருக்களிலும் தேங்கி வரும் குப்பைகள் தினமும் அகற்றப்படுவதில்லை. இதனால் இந்த பகுதியே துர்நாற்றம் வீசி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே மேற்கூறிய பகுதிகளில் தேங்கி வரும் குப்பைகளை தினமும் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.