புகையால் மாணவர்கள் அவதி

Update: 2022-09-19 12:17 GMT

46 புதூர் நொச்சிக்காட்டு வலசு கம்பன் நகர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடம் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் இந்த குப்பையில் சிலர் தீ வைத்துவிடுகின்றனர். இதனால் குப்பையில் இருந்து கரும்புகை எழும்பி அந்த பகுதியில் பரவுகிறது. இதன்காரணமாக பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதுடன், மூச்சு திணறலும் ஏற்படுகிறது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்