சென்னை அமைந்தகரை அய்யாவு காலனி விநாயகர் கோவில் தெருவில் குப்பைகள் தேங்கி வருகிறது. இதனால் தெருவே அலங்கோலமாக காட்சியளிப்பதுடன் துர்நாற்றம் வீசியும் வருகிறது. இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற வழி செய்ய வேண்டும்.