இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்

Update: 2022-07-13 13:39 GMT


கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளி ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது.

இந்த 2 பள்ளிகளிலும் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கிழக்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்து.

சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்து இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் சாலையில் செல்லும் வாகனங்கள் சத்தங்கள் அதிகளவில் ஏற்படுவதால், வகுப்பறையில் மாணவர்கள் கவனம் சிதறும் நிலை உருவாகி உள்ளது. எனவே இதை தடுக்க சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைத்திட வேண்டும்.


மேலும் செய்திகள்