செங்கல்பட்டு மாவட்டம் கன்னிவாக்கம் பகுதி ராஜ ராஜ சோழபுரத்தில் தார் சாலைகள் போடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் அல்லது நடந்து செல்லும் போது பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் மண் சாலை என்பதால் சேரும் சகதியுமாக காட்சியளித்து கடந்து செல்லவே முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே மண் சலையை தார் சாலையாக மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .