சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின்ரோடு கிழக்கு பகுதியில் ரெயின்போ குடியிருப்பு உள்ளது. இதன் எதிரே இருந்த மின்சார இணைப்பு பெட்டியை அகற்றிவிட்டனர். ஆனால் மின்சார வயர்கள் மழைநீர் வடிகால்வாயில் உள்ள தண்ணீரில் மிதந்து வருவதால் மின்கசிவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.