சென்னை தியாகராய நகர் பிஞ்சலா சுப்பிரமணியம் தெருவில் உள்ள குடியிருப்புக்கு அருகே மின்சார கேபிள்கள் வெளியே நீட்டிக்கொண்டு அபாயகரமாக காட்சியளிக்கிறது. அக்கம்பக்கத்து வீடுகளில் குழந்தைகள் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின்சார கேபிள்களை சரி செய்ய வேண்டுகிறோம்.