சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ 3-வது பிரதான சாலை அரசு பள்ளி எதிரே உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் மின் இணைப்பு பெட்டி சரி செய்யப்பட்டது. துரிதமாக செயல்பட்ட மின் வாரிய ஊழியர்களுக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் மக்கள் நன்றியை தெரிவித்தனர்.