பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-02 14:20 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஊராட்சி நெடுஞ்சாலை ஓரத்தில் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவை காலை மற்றும் மாலை வேளைகளில் இளைஞர்கள் சிறுவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விளையாட்டு பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மக்களுக்கு பல வகையில் பயன்பட்டு வரும் பூங்கா மீண்டும் புதுப்பிக்கப்படுமா?

மேலும் செய்திகள்