மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. இதன் காரணமாக அடிக்கடி வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், குத்தாலம்.