தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-25 17:42 GMT

வேடசந்தூரை அடுத்த எரியோடு பஸ் நிலையம் அருகே தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.




மேலும் செய்திகள்