முடங்கி கிடக்கும் பணி

Update: 2022-07-09 10:35 GMT
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் மேலதெருக்கரை பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த படிப்பகம் மற்றும் சமூக நலக் கூடத்தை இடித்து அகற்றிவிட்டு சுகாதார நிலையம் அமைக்க புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது இந்த கட்டிட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் சுகாதார நிலையமாக செயல்பட்டால் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள். எனவே முடங்கி கிடக்கும் பணியை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏ.பி. அருள்குமரேசன், கிருஷ்ணன்கோவில்.

மேலும் செய்திகள்