மின் விளக்குகள் எரியுமா?

Update: 2022-09-03 11:25 GMT

வேலூர்-சித்தூர் நெடுஞ்சாலையில் செங்குட்டை விநாயகர் கோவில் அருகில் இருந்து ராஜீவ்காந்தி நகர் கல்புதூர் வரையிலும் சாலையின் நடுவே தடுப்புச்சுவரில் அமைந்துள்ள 20 கம்பங்களில் 40 மின் விளக்குகள் 15 நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த வழியாக செல்வோருக்கு திருட்டு பயம் உள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் மின் விளக்குகளை எரியவிடுவார்களா?

-பி.துரை, கல்புதூர். 

மேலும் செய்திகள்