ஒதுக்குப்புறமாக இருக்கும் மின் வாரிய அலுவலகம்

Update: 2026-05-17 18:50 GMT

திமிரியை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் மின்வாரிய அலுவலகம் ஊரில் இல்லாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் ஒதுக்குப்புறமாக உள்ளது. அதாவது, ஆரணி-ஆற்காடு மெயின் ரோட்டில் உள்ள விளாப்பாக்கம் சமுதாயக்கூட கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மின் சம்பந்தப்பட்ட புகார்களை நோட்டில் எழுதி வைப்பதற்காக சென்று வர சிரமப்படுகின்றனர். மின் வாரிய அலுவலகத்தை பேரூராட்சி மன்றம் அருகில் அல்லது பழைய பேரூராட்சி மன்ற கட்டிடத்தில் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-அகோரம், விளாப்பாக்கம்.

மேலும் செய்திகள்