எரியாத மின் விளக்குகள்

Update: 2022-09-24 12:10 GMT

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலிருந்து மத்திய பஸ் நிலையம் வரை சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மின் விளக்குகள் கடந்த ஒருநாளாக சரியாக எரியவில்லை. இதனால் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவில் அவ்வப்போது சாலையில் நாய்கள், மாடுகள் போன்றவை சுற்றித் திரிவதால், விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-அருணாச்சலம், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்