தெரு மின்விளக்கு எரியவில்லை

Update: 2023-03-05 11:18 GMT

ஆற்காடு தாலுகா கே.வேலூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் தெரு மின் விளக்கு எரியவில்லை. இதுபற்றி ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலரிடம் பல முறை எடுத்துக்கூறியும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெரு மின் விளக்கை எரியவிடுவார்களா?

-கிராம மக்கள், கே.வேலூர். 

மேலும் செய்திகள்