மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2022-12-18 12:10 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைமேடு வீதி அருந்ததியர் காலனியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தப் பகுதியில் 2 மின்கம்பங்களில் தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கும், மின் விளக்குகளை பராமரிக்கும் ஊழியர்களிடமும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை எரியவிடுவார்களா?

-ராஜா, காவேரிப்பாக்கம். 

மேலும் செய்திகள்