சீரான மின்வினியோகம் இல்லாததால் அவதி

Update: 2023-09-03 12:13 GMT

அரக்கோணம் தாலுகா அம்பரீசபுரம் கிராமம் ஜடேரி ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து கடந்த ஒரு மாத காலமாக சீரான மின் வினியோகம் இல்லை. இதனால் திடீரென உயர் மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. இதனால் மின்மோட்டார்கள் மூலம் விவசாயிகளால் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. வீடுகளில் உள்ள மின்சாதனப் பொருட்களை பயன்படுத்த இயலவில்லை. சீரான மின்சார வினியோகம் இல்லாததால் விவசாயிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான மின்வினியோகம் செய்வார்களா?

-முருகன், அம்பரீசபுரம் கிராமம். 

மேலும் செய்திகள்