குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் சிரமம்

Update: 2024-04-14 14:47 GMT

வேலூர் கஸ்பா தர்மகர்த்தா பரமசிவம் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பகுதியில் வினியோகம் செய்யப்படும் மின்னழுத்தம் சராசரியை விட மிகக் குறைவாக உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆபத்தான நிலையில் இயங்கிகொண்டிருக்கின்றன. மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எங்கள் பகுதியில் புதிதாக ஒரு டிரான்ஸ்பார்மரை அமைத்து போதிய மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.கார்த்தி, வேலூர்.

மேலும் செய்திகள்