பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

Update: 2026-09-13 09:46 GMT

பல்லடம் கடைவீதி மற்றும் மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் பொதுமக்கள் நலன் கருதி, மின்கம்பத்தில் மின்விளக்குகள் ெபாருத்தப்பட்டு ஒளிரச்செய்தனர். ஆனால் அந்த மின்விளக்குகள் இரவு நேரத்தில் ஒளிருவதோடு, பகலிலும் ஒளிர்கிறது. இதனால் மக்களின் வரிப்பணம்தானம் விரையம் ஆகிறது. இதுகுறித்து அதிகாரிகளின கவனத்துக்கு கொண்டு சென்றாலும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் அந்த மின்விளக்குகள் ஒருசில நேரங்களில் இரவில் ஒளிர்வதில்லை. எனவே மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

செல்வம், பல்லடம்.

மேலும் செய்திகள்