பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கோவில்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தினசரி பலமுறை தொடர்ச்சியாக மின்சாரம் தடைபடுகிறது. இதனால் மாணவர்கள் படிப்பிலும், பொதுமக்களின் அலுவலக வேலைகளிலும் மற்றும் அன்றாட வாழ்க்கையிலும் பெரும் சிரமம் ஏற்படுவதுடன் மின்சார சாதனங்கள் சேதமடையும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் தடையற்ற நிலையான மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.