தஞ்சாவூர் மன்னார்குடி சாலையில் சடையார்கோவில் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் உள்ள மின் கம்பகங்களில் மின் விளக்குகள் எரிவது இல்லை. இதனால் இருள் சூழ்ந்து உள்ளது. பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருட்டாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை ஒளிரச்செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.
பொதுமக்கள், சடையார்கோவில்