பழுதாகும் மின்சாதனங்கள்

Update: 2026-08-23 10:04 GMT

கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கெவிப்பாரா உள்பட பல இடங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சில நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் மின் வினியோகம் தொடங்குகிறது. இவ்வாறு அடிக்கடி மின்சாரம் துண்டிப்பதும், மீண்டும் மின்சாரம் வருவதுமாக உள்ளதால் மின் சாதனங்கள் பழுதடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீரான முறையில் மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்