ஒளிராத மின்விளக்கு

Update: 2026-08-23 10:39 GMT

மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பொன்கரை கிராமத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கிற்காக சுவிட்சு பெட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெட்டியும், சுவிட்சும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மின்விளக்கு தெரியாததால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றன. மேலும், நகை பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த சுவிட்சு மற்றும் சுவிட்டு பெட்டி ஆகியவற்றை அகற்றிவிட்டு புதியதை பொருத்தி மின்விளக்கை ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யா, புதூர்.

மேலும் செய்திகள்