திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா வடமாதிமங்கலம் கிராமத்தில் இருந்து திருமலை ராயன் குப்பம் சாலையில் உள்ள மின் விளக்குகள் சரியாக எரியவில்லை. அந்த வழியாக இரவில் செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. சாலையின் குறுக்கே விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருமின்விளக்குகளை பொருத்தி எரியவிட வேண்டும்.
-தாமோதரன், வடமாதிமங்கலம்.