திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் சந்தை, வி.ஐ.பி. நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே மின் அழுத்தத் தாழ்வுப் பிரச்சினை நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீட்டு உபயோக மின் சாதனங்கள் அனைத்தும் அடிக்கடி பழுது ஏற்பட்டு வீணாகின்றன. எனவே, மின்னழுத்த தாழ்வு பிரச்சினையை சரிசெய்ய புதிய மின்மாற்றி அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.