ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-07-19 15:43 GMT

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகுழந்தைப்புதூரில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நாமகிரிப்பேட்டை வளமீட்பு பூங்கா நுழைவு வாயில் அருகே உள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், இரும்பு கம்பிகள் தெரிந்தபடியும் காட்சி அளிக்கிறது. இதனால் பலத்த காற்று அடித்தால் அந்த மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சேதமான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் வைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்