தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட என்.என்.பேட்டை வீதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்று சிமெண்டுகள் பெயர்ந்து அடிப்பகுதியில் கீறல் விழுந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இது எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர். மேலும், தனியார் நிறுவன கேபிள் வயர்கள் மின்கம்பத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மின்கம்பம் உறுதித்தன்மையை இழந்து வருகிறது. எனவே, சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
-ராஜா, தாராபுரம்.