சென்னை பெரம்பூர், பக்தவச்சலம் காலனி பகுதியில் சாலையில் உள்ள சில மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் சாலையில் நடந்து செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் விபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை சரிசெய்து தரவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.