நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே புதுப்பட்டி புதூர் பகுதி உள்ளது. இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், புதூர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்களில் சோலார் மின்விளக்கு பொருத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக அந்த சோலார் மின்விளக்குகள் தினமும் காலை 9 மணி வரை எரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் என அவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். எனவே பகலில் எரியும் மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.