ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் சில நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சடைகின்றனர். மேலும் வாகனங்களையும் இயக்க சிரமமாக உள்ளது. எனவே மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.