ராமநாதபுரம் நகர் விவேகானந்தர் சாலை பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே முன்அறிவிப்பின்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகின்றது. இதனால் தற்போது வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வீட்டில் இறங்கும் வெப்பத்தால் குழந்தைகள் மற்றும் சிகிச்சை பெறும் முதியோர்கள் மின் விசிரிகளை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.