சின்னசேலம் அடுத்த பூசப்பாடி- மூங்கில்பாடி வரை செல்லும் சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு மின்விளக்குகள் அமைத்து தர மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.