சின்னசேலம் அடுத்த நமசிவாயபுரம் மாரியம்மன் கோவில் பின்னால் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் அனைத்தும் வெளியே தெரிகின்றன. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் ஒருவித பயத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நிறுவ மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.