மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபட்டி கிராமத்தில் ஊரின் மையப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் இருந்த மின் விளக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டு பல மாதங்களாக கிராமமே இருளில் மூழ்கியுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி உயர்கோபுர கம்பத்தில் அகற்றப்பட்ட மின்விளக்குகளை பொருத்த மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?.