தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் தாலுகா அலுவலகம் அருகே ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை சாலை ஓரத்தில் மரம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. அதன் அருகே வாய்க்காலில் தண்ணீர் ஓடுவதால் மரத்தின் வேரில் அரிப்பு ஏற்பட்டு எந்த நேரமும் கீழே விழக்கூடிய நிலையில் உள்ளது. மரத்திற்கு மேல் உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்கிறது .இதனால் அருகே பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளது. மேலும் நாடிமுத்து பிள்ளை சாலை வழியாக வாகனங்களும் பொதுமக்களின் நடமாட்டமும் இருந்து கொண்டடே இருக்கும். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.