போக்குவரத்து நெரிசல்

Update: 2026-02-15 11:47 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையின் முன்பு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மின்கம்பம் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் ஆஸ்பத்திரிக்கு வரும் கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடத்தில் போக்குவரத்து இடையூறை ஏற்படுத்தும் மின்கம்பத்தை அகற்றி மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்