விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-02-15 11:45 GMT

விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிற்கும் இடத்தில் மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த மின் கம்பத்தில் வைக்கப்பட்டுள்ள மீட்டர் பெட்டி மிகவும் தாழ்வாக காணப்படுகிறது. மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மேலும் செய்திகள்