திருச்சி மாவட்டம் பெல்ஸ் கிரவுண்டு 50-வது வார்டு ஆதிசக்தி மாரியம்மன் கோவில் அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்நிலையில் காற்றடிக்கும் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றியமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.