மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்தில் இருந்த உயர்கோபுர மின்விளக்கு சாலை விரிவாக்கப்பணியின்போது அகற்றப்பட்டது. இதனால் இரவு வேளைகளில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் விபத்துகளும், திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களும் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே அகற்றப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை மீண்டும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.