சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-12-28 11:45 GMT

பட்டுக்கோட்டை டவுன் நாடியம்மன் கோவில் பின்புறம் சிவ கொல்லை 3-வது தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதம் அடைந்துள்ளது. மின்கம்பத்தின் மேற்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே முறிந்து விழும் நிலையில் இருக்கிறது. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்