தர்மபுரி 4 ரோடு சந்திப்பில் இருந்த உயர்கோபுர மின் விளக்குகள் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்டன. தப்போது சாலை பணிகள் முடிந்து மீண்டும் அந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மீண்டும் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?