தஞ்சை-நாகை சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் மின்விளக்குகள் உள்ளன. இவை கடந்த சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரத்தில் மேம்பாலம் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.