ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கந்தமாதன பர்வதம் பகுதி சாலைகளில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குவதுடன், திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.