விருதுநகர் தாலுகா ஓ. கோவில்பட்டி கிராமத்தில் கல்லறைத் தோட்டம் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் முற்றிலுமாக சேதமடைந்து கீழே முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?