சென்னை துரைப்பாக்கம், ராஜூ நகர் 2-வது தெருவில் மின்சார ஒயர்கள் பொதுமக்களுக்கு ஆபத்தான வகையில் சாலையோரமாக கிடக்கிறது. இதனால் பாதசாரிகள், அருகேயுள்ள குடியிருப்புவாசிகள் மின்விபத்து ஏற்பட்டு விடுமோ? என்று அச்சத்தில் இருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் ஆபத்தான ஒயர்களை பாதுகாப்பான முறையில் அமைத்திட உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.