சென்னை புதுப்பேட்டை, லாங்ஸ் கார்டன் சாலையில் உள்ள மின்மாற்றியை சுற்றிலும் மர்ம நபர்கள் பழைய கழிவு பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகளிடம் கூறினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. எனவே இதுசம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் மின்மாற்றியை சுற்றியுள்ள கழிவு பொருட்களை அகற்றிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.