திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் மற்றும் தெருக்கள் உள்ளன. இங்கு ஏராளமான பேர் பணிசெய்கிறார்கள். இரவு நேரங்களில் இங்குள்ள பெரும்பாலான தெருக்களில் உள்ள சாலைகளின் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. சாலைகளின் தரமும் மோசமாக உள்ளது. போதிய வெளிச்சம் இல்லாததால் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெரியோர், பெண்கள் மேடு,பள்ளம் தெரியாமல் கீழே தடுமாறி விழும்நிலை ஏற்படுகிறது. எனவே இதுதொடர்பான அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்கிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.