பழனி ரெயில் நிலையத்தில் இருந்து புதுதாராபுரம் செல்லும் சாலையை இணைக்கும் இணைப்பு சாலையில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இணைப்பு சாலையில் தெருவிளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும்.